Friday 31 May 2019

16. கம்யூனிச சமூகத்தில் அரசு உதிருதல்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

மார்க்சிய-லெனினிய விஞ்ஞானத் தத்துவத்தின் முக்கிய ஆரூடங்களில் ஒன்று, கம்யூனிசத்தில் அரசு என்பது கம்யூனிச சமுதாய சுய நிர்வாகத்திற்கு இடமளித்து உதிர்ந்து மறையும் என்ப தில் அடங்கியுள்ளது. அரசு தவிர்க்க இயலாதவாறு குறிப் பிட்ட வரலாற்று நிலைமைகளில் தோன்றியது. இதே மாதிரி தவிர்க்க இயலாத வகையில் இது சமுதாய வாழ்க்கையின் அரங்கிலிருந்து மறைய வேண்டும்.

அரசு உதிர்ந்து மறைவது என்பது ஏதோ ஒரே நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியல்ல, இது படிப்படியான நீண்ட ஒரு நிகழ்ச்சிப் போக்காகும். * ' அரசு முழுமையாக உதிர்ந்து மறைய முழுக் கம்யூனிசம் தேவை'' என வி. இ. லெனின் சுட்டிக் காட்டினார்.

அரசு உதிர்ந்து மறைவதற்கான நிபந்தனை கள், முன் தேவைகள் கம்யூனிசக் கட்டுமானத்தின் நிகழ்ச்சிப் போக்கில் தோற்றுவிக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இவை பொருளாதார முன்தேவைகளாகும். மக்களின் வளர்ந்து வரும் பொருளாயத மற்றும் ஆன்மீகத் தேவைகளை முற்றிலும் பூர்த்தி செய்ய உதவும் உற்பத்திச் சக்திகளின் உயர்வான வளர்ச்சித் தரத்தை அடைவது இவற்றில் அடங் கும்; எனவே உழைப்பு மற்றும் வினியோகத்தின் வரையளவு களின் பாலான கண்காணிப்பு தேவையற்றதாய் இருக்கும்.

அரசு உதிர்ந்து மறைவதற்குச் சமூக முன் தேவைகளும் அவசியம். வர்க்கப் பிரிவுகள் மற்றும் வேறுபாடுகளின் சகல வித சுவடுகளையும் துடைக்க வேண்டும். இதற்குப் பின் தான் சமுதாயத்தில் மக்களுக்கிடையேயான உறவுகள் அரசியல் தன்மையை இழக்கும். 2. இறுதியாக, அரசு உதிர்ந்து மறைவதற்கு சித்தாந்த முன்தேவைகளும் அவசியம்: சமுதாய உறுப்பினர்களின் உயர் வான உணர்வு மற்றும் கலாச்சாரத் தரம், மக்களின் உணர் விலும் அன்றாட வாழ்விலும் முதலாளித்துவத்தின் மிச்ச சொச்சங்களை ஒழித்தல், கம்யூனிச ஒழுக்கத்தின் முழு வெற்றி ஆகியவை இந்த முன்தேவைகளாகும்.

இவை தான் அரசு உதிர்ந்து மறைவதற்கான முக்கிய உள் முன்தேவைகளாகும். இது தவிர சில குறிப்பிட்ட வெ ளி நிபந்தனைகளும் அவசியம்; இவையின்றி அரசால் உதிர்ந்து உலர இயலாது. சர்வதேச அரங்கில் சோஷலிசத்தின் முழு முடிவான வெற்றி, ஏகாதிபத்தியத் தரப்பில் இருந்து இரா ணுவத் தாக்குதலுக்கான எந்தவித அபாயமும் இல்லாமை ஆகியன இவற்றில் அடங்கும்.

அரசு உதிர்ந்து உலர் வதையும் கம்யூனிச சமுதாய சுய நிர்வாகம் உருவாவதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற. தனியான இரு நிகழ்ச்சிப் போக்குகளாகக் கற்பனை செய்யக்கூடாது. சோஷலிச அரசால் சேர்க்கப்பட்டுள்ள பெரும் அனுபவத்தை மறுப்பதோ அல்லது காலத்தின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட, கம்யூனிசத்தில் வெற்றிகரமாகப் பயன் படுத்தக் கூடிய சமுதாய நிர்வாக வடிவங்கள், முறைகளை மறுப்பதோ முற்றிலும் விவேகமற்றதாயிருக்கும். இங்குள்ள பிரச்சினை விவேகமான அணுகுமுறை மட்டுமல்ல; முதலில் அரசு உதிர்ந்து உலர்ந்து விட்டு பின் ''தூய்மைப்படுத்தப் பட்ட'' இடத்தில் சமுதாய சுய நிர்வாக முறையைக் கட்ட ஆரம்பிப்பது என்ற இத் தகைய நிகழ்ச்சிகளின் வளர்ச்சி இயலாதது. இது சோஷலிச அரசு முறையானது கம்யூனிச சமுதாய சுயநிர்வாகமாக வளர்ச்சியுறும் ஒரே நிகழ்ச்சிப் போக்காகும்.

இதற்கான பாதை, ஜனநாயகத்தை மேற்கொண்டு விரிவு படுத்தி மேம்படுத்தல், மேன்மேலும் அதிக மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்தல், அரசு இயந்திர நட வடிக்கையின் மீதான மக்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தல் ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது.

நிர்வாக உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தல், மாற்றுதல், வாக்காளர்களின் முன் இவை அறிக்கை சமர்ப்பித்தல், பொது மக்களின் கருத்தைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளுதல், தனி நபரின் பரவலான உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் சமுதாயத்தின் விஷயத்தில் தனி நபரின் கடமைகளைப் பின்பற்றுதல் முதலிய ஜன நா யக உறவு முறைகளும் பாரம் பரியங்களும் கம்யூனிசச் சமுதாயத்தில் பன்முக வளர்ச்சி யைப் பெறும் என்று முழு நம்பிக்கையோடு கூறலாம்.

கம்யூனிசச் சமுதாயத்தில் ஏதாவதொரு ஆட்சி நிலவுமா?

நிர்பந்தத்தை (நீதி மன்றம், சிறைகள், போலீஸ் முத லியவை) ஆதாரமாகக் கொண்டு இயங்கும் அரசியல் ஆட்சி கம்யூனிசத்தில் இருக்காது என்பதை மார்க்சிய-லெனினியத் தத்துவம் அடிப்படையாகக் கொள்கிறது. ஆனால் சமுதாய அமைப்பு எப்படியிருந்தாலும் எப்போதும் ஒரு புறத்தில் குறிப்பிட்ட செல்வாக்கும் மறு புறம் குறிப்பிட்ட கீழ்ப்படி தலும் இருக்கும். கம்யூனிச உற்பத்தி போன்ற சிக்கலான, முழுமை பெற்ற பொருளாதார அமைப்பு விவேகமான மையப்படுத்த லோ, தலைமையோ இன்றி இயங்க முடியாது. எனவே கம்யூனிசத்திலும் ஆட்சி (இதைச் செல்வாக்கு என்றழைப்பது நல்லது) இருக்கும்; ஆனால் இதற்கு அரசியல் தன்மை இருக்காது, இது தன்னிச்சையான உழைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கைக் கட்டுப்பாட்டை ஆதாரமாகக் கொண் டிருக்கும்.

நிர்வாக-ஒழுங்கமைப்பு மற்றும் சமூக-கலாச்சாரப் பணி போன்ற சோஷலிச அரசின் பணிகள் கம்யூனிசத்தில் மறை யாது, மாறாக இன்னமும் வளர்ச்சியுறும். ஆனால் இவை அரசு உறுப்புக்களால் அல்ல, சமுதாய சுய நிர்வாக முறையால் நிறைவேற்றப்படும். இந்த இயந்திரத்திற்கு அரசியல் தன்மை இருக்காது என்றாலும், தனது பெரும் தார்மீக செல்வாக்கின் காரண மாய் இது எந்த ஒரு அரசைவிடவும் வலிமை மிக்கதாயிருக்கும்.

இதிலிருந்து இன்னுமொரு முக்கியக் கருத்து பிறக்கிறது. அளவில் பெரிய, சிக்கலான கம்யூனிசப் பொருளாதாரத் திற்குக் கண்டிப்பாகத் தேர்ச்சியுள்ள மையப்படுத்தப்பட்ட நிர்வாகமும் எனவே இதற்குரிய தேர்ச்சி பெற்ற நிபுணர் களும் தேவை. ஆனால் சமுதாய வாழ்க்கைக்கு வகை செய்யும் உற்பத்தி, மற்ற நிகழ்ச்சிப் போக்குகளை நிர்வகிப்பது என் பது எந்தவித சலுகைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்காது; மற்ற எல்லா வேலைகளையும் போன்றே இதுவும் சாதாரண வேலையாக இருக்கும்.

அரசு உதிர்ந்து மறைவது என்பது சிக்கலான சமூக நிகழ்ச்சிப் போக்கு . கம்யூனிசச் சமுதாய சுய நிர்வாக முறை உருவான பின்னரும் கூட உடனடியாகத் தேவையான ஸ்தாபன மேம்பாட்டை அடையாது என்பது தெட்டத் தெ ளிவு. எனவே அரசு உதிர்ந்து மறைந்த பின்னரும் கம்யூ னி ஸ்டுக் கட்சி ஒரு சில காலத்திற்கு இருக்கும் என்று கூற எல்லா ஆதாரங்களும் உண்டு. சமுதாய சுய நிர்வாகத்தின் எல்லாப் பிரிவுகளின் இடையறாத, ஒத்திசைவான இயக்கத் திற்கு வகை செய்வதன் மூலம் கட்சி தன து வரலாற்றுப் பணியை நிறைவேற்றி சமுதாயத்துடன் ஒன்று கலக்கும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment