Wednesday 26 June 2019

மார்க்சின் “மூலதனம்” நூல் பொருளாதாரத்தை மட்டும் பேசுகிறதா? இது பொருளாதார நூலா? அரசியலைப் பேசுகின்ற அரசியல் பொருளாதார நூலா?


மார்க்ஸ் மூலதன நூலுக்கு முன்பு எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதை படித்தால், கம்யூனிஸ்டுகளுக்கு பொருளாதாரத்தின் மீதான அரசியல் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். அது சமூக மாற்றமே அதாவது சமூக புரட்சியேயாகும். சமூக மாற்றம் அற்ற பாடமாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் மார்க்சின் மூலதனத்தை வெறும் பொருளாதார நூலாக, முதலாளித்துவ அமைப்பை விமர்சனம் மட்டும் செய்கின்ற நூலாக அறிமுகம் செய்கின்றனர்.

"மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

மார்க்ஸ் எழுதிய மூலதன நூலைப் பற்றிய மதிப்புரையில் எங்கெல்ஸ் எழுதிகிறார்:-

"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மார்க்சின் தற்படைப்பான சாதனையாகும்."
(மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி பற்றிய மதிப்புரை பக்கம் 15)

சோஷலிச சமூக மாற்றத்தை பேசாத, முதலாளித்துவ பொருளாதார அமைப்பை மட்டும் மூலதன நூல் பேசுகிறது என்பது அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தானதாகும். சோஷலிச சமூக மாற்றத்தை சாத்தியமாக்கும் பொருளாயாத விளக்கத்தையே மூலதன நூல் நமக்கு சொல்கிறது.

எங்கெல்சின் வழிகாட்டுதலுடன் கீழ்காணும் மார்க்சின் வரிகளைப் படிக்கும் போது மூலதனம் என்னும் நூல் முதலாளித்துவம் பற்றிய நூல் மட்டும் கிடையாது, முதலாளிததுவத்தின் முடிவைப் பற்றியதும் ஆகும் என்பதை அறியலாம்.

மார்க்ஸ்:-
முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்து மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறதுமூலதனம் (முதல் தொகுதி பக்கம் 1027)

முதலாளித்துவத்தின் முடிவும், சோஷலிச சமூகத்தின் தொடக்கமும் பற்றியே மூலதன நூல் பேசுகிறது.

அதுமட்டும் அல்லாது மூலதன நூல் கம்யூனிச சமூகம் பற்றியும் பேசுகிறது. சமூக மாற்றத்துக்கு அஞ்சுகிற முதலாளித்துவ அறிஞர்கள், மார்க்சின் மூலதன நூலை வெறும் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி விமர்சிக்கிறது என்பதாக சுருக்கிக் காட்டுகின்றனர்.

மூலதன நூல் வெறும் பொருளாதார நூல் தான் என்பதே முதலாளித்துவத்தின் சதி.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

இந்த விதி எவ்வாறு சோஷலிசப்புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையே மூலதன நூல் நமக்கு விளக்குகிறது. சோஷலிசப் புரட்சிக்கான விஞ்ஞானத் தன்மையை மூலதன நூல் நமக்கு அளிக்கிறது. அதனால் இது வெறும் பொருளாதார நூல் அல்ல அரசியல் பேசுகிற அரசியல் பொருளாதார நூலாகும்.

Thursday 20 June 2019

சோஷலிச சமூகத்தில் உழைப்புக்கேற்ற பங்கீடு என்னும் பொருளாதார விதி – பி.நிக்கிடின்


ஒவ்வோர் உற்பத்தி முறைக்கும் அதற்கென்று அமையும் பங்கீட்டு முறை உண்டு; உற்பத்தி உறவுகளே பங்கீட்டு உறவுகளை நிர்ணயிக்கின்றன.

முதலாளித்துவத்தில், சுரண்டும் வர்க்கங்களின் நலன் கருதியே பங்கீடு நடைபெறுகிறது. தொழிலாளர் உழைப் பால் உருவான சமூக உற்பத்திப் பொருளின் பெரும் பகுதியை, அதாவது உபரி மதிப்பு என்பதனைச் சுரண்டும் வர்க்கம் அங்கே தன தாக்கிக் கொள்கிறது. இப்பங்கீடு உழைப்பின்படி நடக்காமல் மூலதனத்தின்படி நடக்கிறது.

சோஷலிசத்தில், மொத்தச் சமூக உற்பத்திப் பொரு ளின் பங்கீடு சோஷலிச விரிவாக்க புனருற்பத்தியின் தொடக் கமும் பொருளாயத அடிப்படையும் ஆகும். அந்த மொத்தச் சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பங்கு, உற் பத்திச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றிற்குப் பதிலாக உபயோகிக்கப்படுகிறது. இன்னொரு பங்கு தேசிய வருவாயாக விளங்குகிறது. முழுச் சமூக நலன் கருதி அது வினியோகம் செய்யப்படுகிறது, உழைப் டபின் தரம், அளவு ஆகியவற்றைப் பொறுத்து அந்தத் தேசிய வருவாயின் ஒரு பங்கு (இது அவசியமான உழைப்பால் படைக்கப்படும்) கூலி என்கிற வடிவில் பங்கீடு செய்யப்படுகிறது. பங்கீட் டின் தலையாய வடிவம் இது தான்.

வளர்ந்த சோஷலிசச் சமூகத்தின் பங்கீட்டுப் பண்பை சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆம் விதி வரையறுக்கிறது. 'சோவியத் மக்களின் உழைப்பு சுரண்டலுக்கு அப்பாற்பட்டது; அதுவே மக்களின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும் நலனுக்கும் ஊற்றாக இருப்பது: ஒவ்வொரு தனிமனிதனின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும் நலனுக் கும் கூட அதுவே மூல ஊற்றாகும்,

“’திறமைக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம்' என்பதே சோஷலிசக் கோட்பாடு; அதன் அடிப்படை யில் தான் உழைப்பு, நுகர்வு ஆகிய இரண்டின் அளவையும் அரசு நிர்ணயம் செய்கிறது.''

உழைப்புக்கேற்ற பங்கீடு என்பது சோஷலிசத்தில் ஒரு புறவயத் தேவையாகும். அங்கே உற்பத்தி என்பதே உற் பத்திச் சாதனங்களின் பொது சொத்தைப் பொறுத்தது. சோஷலிசக் கட்டத்தில், தேவைக்கேற்ற ஊதியம் என்கிற அளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெறவில்லை. வாழ் வின் முதன்மைத் தேவை என்கிற கட்டத்தை உழைப்பு எய் தவில்லை, இன்றும் வாழ்க்கைச் சாதனமாகவே உழைப்பு விளங்குகிறது; அதற்கேற்ற வருவாயை எதிர்பார்க்கக் கூடிய நிலையிலேயே இருக்கிறது. இறுதியாக, சோஷலிசத் தில் மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் வேறுபாடுகள் இன்றும் நில வு கின் றன; நுண்ணிய உழைப்புக்கும் நுண்மை யற்ற உழைப்புக்கும் இடையேயான வேறுபாடுகளும் இன்றும் மறையவில்லை, ஆகவே உழைப்புக்கேற்ற பங்கீடு இயல் பாகவே நிகழ்ந்தாக வேண்டும்.

சோஷலிசத்தின் கீழ், சமூகத்தில் ஒருவரது நிலையையும் தல னையும் நிர்ணயிக்கும் ஒரே காரணி அவரது உழைப்பே; இதன் அடிப்படையில் நுகர்வுப் பொருள்களின் பங்கீடு சமூ கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆற்றும் உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே அமைகிறது.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்பது சோஷலிசச் சமூகத்தின் பொருளாதார விதி.

உற்பத்தி உயர்வு, உழைப்பின் தரம், உற்பத்தித் திறன் ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பாளரின் ஊக்க அதிகரிப்பு - இவற்றை உந்துவிக்கும் நெம்புகோலாகவே உழைப்புக் கேற்ற பங்கீடு விளங்குகிறது எனக் கருதினார் லெனின்.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்ற சோஷலிசத்தில் காணப் படும் சாதகக்கூறு முதலாளித்துவத்தில் இல்லை. அத் குகை ய பங்கீட்டின் காரண மாக, சோஷலிசச் சமூகத்தில் உழைக்காத வருவாய், ஒட்டுண் ணியம் ஆகிய ஊறுகள் இல்லை. எனவே சோஷலிசத்தில் உற்பத்தி ஊற்றுகளுக்கும் தொழிலாளர் திருப்திக்கும் இடையூறுகள் இல்லை. மாறாக உழைப்புக்கேற்ற பங்கீடு உற்பத்தி வளர்ச்சியின் மாபெரும் உந்து சக்தியாக விளங்கி உழைப்பாளிகளின் திறமைகளின் எல்லைகளை விரிவடையச் செய்கிறது. “உழைக்காதவன் உண்ணலாகாது'' என்றார் லெனின். அந்தக் கூற்றில் “சோஷ லிசத்தின் அடிப்படை காணக்கிடக்கிறது; அதன் வலிமையின் தவிர்க்க முடியாத ஆதாரமும், அதன் இறுதி வெற்றியின் அழிக்க முடி யாத உறுதியின் அறிகுறியும் காணக் கிடக்கின்றன” (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 8, பக்கம் 18).)

உழைப்புக்கேற்ற பங்கீட்டு விதியில் பொதிந்துள்ள பொருள் இது தான். 1) சமூகத்திற்காக ஒருவர் ஆற்றும். உழைப்பின் அளவையும் தரத்தையும் ஒட்டி அவருக்கான நுகர்வு நிதிப் பங்கீடு செய்யப்படுவ தன் அவசியம்; அதன் மூலம் உழைக்கும் மக்களது உழைப்பு நேரம் முழுமையாக வும் சரியாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற உத்தர வாதம். 2) ஒரு குறிப்பிட்ட நேரம் ஆற்றப்படுகிற நுண் ணு ழைப்புக்கு அதே நேரத்தில் ஆற்றப்படும் நுண்மையற்ற உழைப்பை விட அதிகமான கூலி வழங்கப்படுவ தன் அவ சியம்; அதன் மூலம் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வும் கலாசார, தொழில் நுட்ப நிலைகளை உயர்த்திக் கொள் ளவும் உழைக்கும் மக்களைத் தூண்ட வேண்டிய கட்டாயம். 3) கடின மான சூழ்நிலைகளில் இரும்பு, எஃகு, நிலக்கரி போன்ற தொழிற்சாலைகளில்) பணிபுரியும் தொழிலாள ருக்கு உயர்ந்த பொருளாய த ஊக்கிகளை வழங்க வேண்டிய தேவை, அதன் மூலம் அவர்களது உயரிய உழைப்புச் செல் விற்குச் சரியான ஈடு செய்யும் அவசியம்.

ஒவ்வொருவரது உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே பொருட்செல்வம் பங்கீடு செய்யப்பட வேண். டும், பால், வயது, இனம், தேசியம் என்கிற வேறுபாடுகள் கருதாமல் மக்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்: இந்த இரு அவசியங்களையே உழைப்புக்கேற்ற பங்கீட்டுப் பொருளாதார விதி வெளிப்படுத்துகிறது எனலாம்.

கம்யூனிசத்தைக் கட்டும் காலக்கட்டம் முழுவதிலும் இவ்விதி செயல் படுகிறது. பொருளாயத மற்றும் கலாசாரச் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, உழைப்பு மக்களின் முதன்மைத் தேவை யாகப் பரிணமிக்கத் தொடங்கும் போது கம்யூனிசப் பங்கீட்டிற்கான நிலையைச் சமூகம் எய் தும் எனலாம்.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்கிற நிலையில், முழு மொத்தச் சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியே வினி யோகம் செய்யப்படுகிறது.

1) உற்பத்திச் சாதனங்கள் நுகரப்படும் போது அவற் றிற்குப் பதிலாக மற்றவற்றைப் பயன்படுத்தும் காலை நேரும் செலவுகள், 2) உற்பத்தி வி ஸ் தரிப்பிற்கான ஒரு பணத் தொகை, 3) காப்பு நிதி, இருப்பு நிதி, 4) நிர்வாகம் செய்ய வும்: பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைப் பரா மரிக்கவும் ஆகும் செலவுகள், 5) உழைப்புக்கான உடலுறுதி யில் லாதோர் காப்பு நிதி ஆகிய மேற்குறித்த செலவுகளை மொத்தச் சமூக உற்பத்திப் பொரு ளி லிருந்து கழிக்க வேண் டி யதன் அவசியத்தை மார்க் ஸ் கோத்தா வேலைத்திட்டத் தின் விமர்சனம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் சோஷலிசச் சமூகம் சரிவர இயங்கவும் முன் னேறவும் இயலும் என்பது அவரது கருத்து. மேற்கூறியவற்றுடன் நாட்டின் பாதுகாப்புச் செலவை யும் மொத்தச் சமூக உற் பத்திப் பொரு ளி லிருந்து கழித் தாக வேண்டும்.

விளைவாக, தனிமனித நுகர்வு நிதி மட்டுமே) உழைப்புக் கேற்ற பங்கீடு செய்யப்படுகிறது. | உழைப்பால் புதிதாக உருவான உற்பத்திப் பொருளின் ஒரு பங்கு பொருளுற்பத்தித் தொழிலாள ரின் சொந்த நுகர்வு நிதியில் சேர்க்கப்படுகிறது. அதுவே அவசிய உற்பத்திப் பொருள் என வழங்கப்படுகிறது. அப்பொருளை உரு வாக்கப் பயன்படும் உழைப்பே அவசிய உழைப்பு என வழங்கப்படுகிறது.

அவசிய உற்பத்திப் பொருளின் அளவுக்கு மேலும், உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் புதிதாக உரு வான உற்பத்தி பொருள் சமூக நிதியில் சேர்கிறது (அதற்கு முன் பயன் படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனச் செலவு கழிக்கப்படுகிறது). அது உபரி உற்பத்திப் பொருள் எனவும், அதற்கான உழைப்பே உபரி உழைப்பு எனவும் வழங்கப்படும். சோஷலிசத்தின் கீழ், உபரி உழைப்பால் படைத்துள்ள உபரி உற்பத்திப் பொருள் சமூகத் தேவைகளை நிறைவு செய்யப் செயன் படுகிறது. உற்பத்தியின் தொடர் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், காப்பு நிதி, இருப்பு நிதி ஆகியவற்றின் உரு வாக்கத்திற்கும், நாட்டின் பாதுகாப்புச் செலவுக்கும், பொருளுற்பத்தி அல் லாத துறை சார்ந்த தொழிலாளர் தேவை நிறைவுக்கும் அது பயன் படுகிறது.

சோஷலிசத்தில் உபரி உற்பத்திப் பொருள் ஒரு சிலர் நலனுக்காகப் பயன்படுவதில்லை; அதற்கு மாறாக முழுச் சமூகத்தின், ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளியின் தேவை நிறைவுக்காகவே பயன்படுகிறது. அது உபரி மதிப்பு எனக் கருதப்படலாகாது. ஏனெனில் அங்கே சுரண்டல் இல்லை; சுரண்டும் வர்க்கங்களும் இல்லை.

சோஷலிசத்தில், முதலாளித்து வத்தைப் போல், அவசிய உற்பத்திப் பொருளுக்கும் உபரி உற்பத்திப் பொருளுக்கும் இடையே பகை முரண்பாடுகள் இல்லை. இங்கே பொருளும் பத்தித் தொழிலாளருக்கும் உபரி உற்பத்திப் பொருள் தேவைப்படுகிறது. ஏனெனில் அது எல்லா உழைக்கும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்கிறது. அத்துடன் சமூக உற்பத்தி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

உழைப்புக்கேற்ற பங்கீடு, உற்பத்தி விளைவுகளில் மக்களின் பொருளார்வத்தை உத்தரவாதம் செய்கிறது, உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பெருக்குகிறது, நுண்மை உழைப்பை அதிகரிக்கிறது, உற்பத்தி நுட்பங்களை விருத்தி செய்கிறது. சோஷலிச ஒழுங்கை மக்களிடையே அறிமுகப் படுத்தி உழைப்பை எல்லாருக்கும் கட்டாயமாக்கி ஒரு படிப் பினையும் தருகிறது.

சோஷலிசத்தில் பொரு ளார்வம் அவசியமே. ஏனெனில் இன்னும் அந்தக் கட்டத்தில் உழைப்பு என்பது எல்லா மனி தர்களின் வாழ்வின் முதன் னை L.)த் தேவை என் கிற நிலையை அடையவில்லை. மக்கள் உணர்விலிருந்து முதலாளித்துவ எச்சங்கள் முழுமையாகத் தகர்க்கப்படவில்லை. பெரும் பான்மைத் தொழிலாளர் தமக்குரிய சமூகக் கடமைகளை உணர்வு பூர்வமாக ஆற்றுகின்றனர். ஆனாலும் சிற்சிலர் அவ்வாறு இல்லாமல் உழைப்பு ஒழுங்கை மீறவும் செய்கின்றனர்.

பொருளார்வக் கோட்பாட்டைச் செயல்படுத்துதல் என் பதன் பொருள் உழைப்புக் குறித்த கம்யூனிசப் பார்வையை உருவாக்குதல் ஆகும். மக்கள் உணர்வு நிலையிலிருந்து கடந்த கால எச்சங்களை நீக்கும் போராட்டத்தின் படைக்கலனாக அது விளங்குகிறது. உழைப்புக் குறித்த பழைய நோக்கி லிருந்து மக்களை விடுவிக்கிறது.

பொருளார்வக் கோட்பாடு, பொருட்செல்வம் ஒரே சமமாக பங்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்கிறது. அத் தகைய சரிசமப் பங்கீடு சோஷலிசத்துக்கு எதிரிடையானது . ஏனெனில் உழைப்புக்கேற்ற பங்கீடு என்பதே பொருளாதார விதி. குட்டி பூர்ஷ்வா முயற்சிகள் மார்க்சிய-லெனினியத்தை ஒரு முழுச் சமத்துவ மாக நிறுவ முனைகின் றன; அம் முயற்சிகள் திரிபு முயற்சிகளே. சோஷலிசத் தின் கீழ், சமத்து வம் என்பதன் பொருள் தனிப்பட்ட தேவைகள், வாழ்க்கை நுகர்வுகள் அனைத்தையும் ஒரே மட்டமாக்கி விடுவது என் பதில்லை, அதற்கு மாறாக ஒரு சமூக சமத்து வத்தை நிறுவு வதே அதன் நோக்கம். உற்பத்திச் சாதனங்கள் பொறுத்த சரிசம் உறவுகள், சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் அனைவரின் சரிசம விடுதலை, உற்பத்திச் சாதனங்களின் தனிச் சொத்தின் சரிசமத் தகர் எ, உழைக்கவும், உழைப்புக் கேற்ற அவசியத் தேவைகளைப் பெறவுமான சரிசம உரிமை ஆகியவற்றையே சமூக சமத்துவம் என்று கூற வேண்டும்.

இவ்வாறாக, ஒரே மாதிரியான சமன் செய்தவற்றை சோஷலிசம் குறிக்கவில்லை; உழைப்புக்கேற்ற பங்கீட்டையே குறிப்பிடுகிறது. அப்பங்கீடு இரு வகைப்படும். ஒன்று ஆலை , அலு வ ல கத் தொழிலாளருக்குக் கூலி; இன்னொன்று கூட்டுப் பண்ணை , சஈட்டுறவுத் தொழில் கூலி ஆகியவை, இவ் விரண்டு வகைப் பங்கீடுகளும், உற்பத்திச் சாதனங்களின் இரு வகைச் சொத்து களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை யொட்டி நடைபெறுகின்றன. அவ்விரு வகைச் சொத்துகள் அரசுச் சொத்து, கூட்டுப் பண்ணைக் கட்டுறவுச் சொத்து ஆகியவை.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)


3) சோஷலிசத்தில் ஒரு பண்ட மதிப்பின் பரிமாணம் – பி.நிக்கிடின்


சோஷலிசத்தில், பண்ட மதிப்பின் பரிமாணம் அப்பண்டத்தை உற்பத்தி செய்யும் போது செலவிடப்படும் சமூக ரீதியில் அவசிய மான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயம் செய்யப் படுகிறது. சமூக ரீதியில் அவசியமான் உழைப்பு நேரம் என் பதன் பொருள், ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் கணிச மான அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய நிறுவனங்கள் செலவிடும் சராசரி உழைப்பு நேரம் என்பதாகும். சராசரி உற்பத்திச் சூழலில் கணிசமான அளவு பண்டங்களை உற் பத்தி செய்யச் செலவிடப்படும் உழைப்பு நேரம் எனவும் கொள்ளலாம்.

தனி நிறுவனங்களில் ஒரு செய் பொருள் உற்பத்திக் காகச் செலவிடப்படும் நேரமே தனி உழைப்பு நேரமாகும்.

முதலாளித்துவத்தில் சந்தையைப் பொறுத்தே சமூக ரீதியில் அவசியமான நேர அளவு அமைகிறது. சோஷலிசத் தில் அரசு, புறவ யப் பொருளாதாரச் சூழலின் அடிப்படை யில் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சியைத் திட்டமிடு கிறது, உழைப்புச் செலவையும் நிர்ணயிக்கிறது , இவ்வாறாக, சமூக ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் மீது தாக்கம் செலுத்தி அதைக் குறைக்கப் பார்க்கிறது.

ஒரு பண்டத்தின் மதிப்பைக் குறைப்பதென்றால் அதன் மீது செலவிடப்படும் உழைப்பு அளவையும் குறைத்தாக வேண்டும். இதனை எப்படிச் சாதிக்க முடியும்?

பண்ட மதிப்பின் பரிமாணம் உழைப்பின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது; உழைப்பின் உற்பத்தித் திறன் பெரு கும் அளவு ஒரு குறிப்பிட்ட அளவு பண்டத்தின் மதிப்பு குறையும்; எனவே உழைப்பின் உற்பத்தித் திறனை அதி கரிக்கச் செய்யும் முயற்சிகள் பண்ட மதிப்பைக் குறைப்பதற் காகச் செய்யும் முயற்சிகளே.
.
பண்ட மதிப்பு என்பது கச்சாப்பொருளீடு முதலிய வற்றையும் பொறுத்ததே. அதாவது எவ்வளவு நிகழ்கால உழைப்பு, உள் ளுழைப்பு செலவிடப்பட்டுள்ளதோ அவ்வளவு வும் பண்ட மதிப்பை உயர்த்துகிறது. உள்ளுழைப்பு என்பது கடந்த கால உழைப்பு; அதாவது கச்சாப்பொருள், இயந்திரச் சாதனங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் மொத்தம். இப்படியாக, பண்ட மதிப்பைக் குறைப்பதற்காக நிகழ்கால உழைப்பு, கடந்தகால உழைப்பு ஆகிய இருவகை உழைப்பிலும் சிக்கனம் அவசியம்.

சோஷலிசப் பொருளாதாரத்தில், உழைப்பு, உற்பத்தி ஆகிய இரு துறைகளிலும் முன்னேறிய முறைகளைப் பரப்பு வதிலும் அறிமுகப்படுத்துவதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன; தொழில் நுட்பச் சாதனைகளும் விரிவாகக் கையாளப்படுகின்றன, இவற்றால் ஒரு குறிப்பிட்ட அளவு செய் பொருளை உற்பத்தி செய்ய ஆகும், சமூக ரீதியில் அவசியமான உழைப்பு நேரம் குறைகின்றது. அனுபவம், தொழில் நுட்ப அறிவு ஆகியவை பரிமாறப்படுகின்றன; பரஸ் பரத் தோழமை உதவிகள் நிகழ்கின்றன. இவற்றால் பின் தங் கும் நிறுவனங்களும் கூட விரைவில் முன்னேறும் நிலை எய்துகின்றன.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)

2) சோஷலிசத்தில் பண்டத்தின் பயன் மதிப்பும் மதிப்பும் – பி.நிக்கிடின்


நாம் முன்பே கண்டபடி ஒரு பண்டத்திற்கு இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று அதன் பயன் மதிப்பு, இன்னொன்று அதன் மதிப்பு. முதலாளித்துவத்தைக் காட்டி, லும் இவை இரண்டிற்கும் சோஷலிசத்தில் பெரும் பொருள் மாறுபாடு உண்டு.

உபரி மதிப்பைக் கவர வேண்டும் என்கிற அடிப்படை (யில் தான் ஒரு முதலாளி பண்ட மதிப்பில் அக்கறை கொள் கிறான். உபரி மதிப்பைப் பெறுகிற அளவு தான் பண்டத்தின் பயன் மதிப்பு முதலாளித்துவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சோஷலிசத்தில், பண்டத்தின் இந்த இரு பண்புகளை யும் கணக்கில் வைத்துக் கொண்டே உற்பத்தி திட்டமிடப் பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

சோஷலிசப் பொருளாதாரத்தில் பண்டத்தின் பயன் மதிப்பு ஒரு சிறப்பான பொருள் கொண்டது. பயன் மதிப்பு களின் அளவை அதிகரிப்பதிலும் அவற்றின் தரத்தை மேன் மைப்படுத்துவதிலும் சோஷலிசச் சமூகத்திற்கு அக்கறை உண்டு. அந்தச் சமூகத்தில் பயன் மதிப்பு வகைகளும் அளவும் திட்டமிடப்படுகின்றன; உற்பத்தியாகும் பாண்டங்களின் தரம் உயரவும் அந்தச் சமூகம் முனைகிறது.

சோஷலிசச் சமூகத்தில் பண்ட மதிப்பும் முக்கியம் வாய்ந்ததாகும். பெளதிக அடிப்படையில் மட்டுமன்றி பண (மதிப்பு) குறியீடுகளின் அடிப்படையிலும் உற்பத்தி அங்கே திட்டமிடப்படுகிறது. பண்ட மதிப்பு தொடர்ந்து படிப்படி யாக வீழும் வகையில் இக்குறியீடுகள் பயன்படுத்தப்படு கின் றன. சோஷலிசக் குவிப்பு தொடர்ந்து அதிகரிக்கவும் சமூகத்தின் உறுப்பினர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

சோஷலிச உற்பத்தியில், பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும் இடையே பகை முரண் கள் இல்லை. ஏனெனில் தனி உழைப் புக்கும் சமூக உழைப்புக்கும் இடையிலும் அங்கே முரண் பாடுகள் இல்லை. இதனால், சோஷலிசத்தில் பண்டத்தின் பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும் இடையே ஒரு முரண் கூட இல்லை என்பது பொருளில்லை. முரண் உண்டு; ஆனால் அது பகை முரண் எனத் தக்க அளவு இல்லை; முதலாளித்து வத் திற்கு மாறாக அதற்கு அழிக்கும் இயல்பும் இல்லை. இத்தகு முரண் பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டு கூறலாம் அங்கே செய் பொருள் தரம் குறைந்ததாக இருப்பின் அது விற்பனையாவது கடினம்; அவசியமில்லாதவை மட்டுமல்ல, தரத்திற்கு மீறிய மதிப்பு உள்ள பொருள்கள் அங்கே விற் பனை யா வ து எளிதில்லை; அவற்றுக்கு அங்கே தேவை இல்லை. அவற்றின் மதிப்பின் அளவு அவை விற்பனையாவதில்லை-பயன் மதிப்பு குறைவதால் பண்ட விலை குறைக்கப்படுகிறது.

திட்டமிட்ட நிர்வாகத்தாலும் செய்பொருள் வகைகள், தரம் ஆகியவற்றின் மேம்பாட்டாலும் அவற்றின் மதிப்புக் குறைக்கப்படுவதாலும் தான் சோஷலிசச் சமூகத்தில், பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும் இடையேயான முரண்பாடு நீக்கப் படுகிறது எனலாம்.

பண்டத்தின் இரு வகைப் பண்பு அப்பண்டத்தை உற் பத்தி செய்ய ஆகும் உழைப்பின் இரு வகைப் பண் பால் நிர்ண யிக்கப்படுகிறது. பண்ட உற்பத்திக்காகச் செலவிடப்படும் உழைப்பு ஒரே சமயத்தில் சூக்குமமாகவும் ஸ்தூால மாகவும் விளங்குகிறது. சோஷலிசத்தில் அவ்விரு வகை உழைப்பும் நேரடியான சமூக உழைப்பின் இரு கூறுகள் எனலாம்.

முதலாளித்துவச் சமூகத்தில் உழைப்பின் இரு வகைப் பண்பு, சமூக உழைப்பு, தனிப்பட்ட உழைப்பு எனப் பிரிந்து நிற்கும் பண்ட உற்பத்தியின் பகை முரணைப் பிரதிபலிக்கிறது.

சோஷலிசச் சமூகத்திலோ முற்றிலும் வேறான நிலை. சோஷலிசப் பொருளாதார அமைப்பு பொதுச் சொத்தை அடிப்படையாகக் கொண்டதாலும், கூலி உழைப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாலும், அங்கே உழைப்பு சமூகப் பண்புடை யது, தனிப்பட்டது என்று பிரிந்து நிற்பதில்லை. சோஷலிசத் தின் கீழ், உழைப்பு தனிப்பட்டதில்லை, அது எப்போதும் நேரடி சமூக உழைப்பாகவே விளங்கும். அந்தச் சமூகத்தில் மக்களின் உழைப்பு, நாடு தழுவிய வண்ணம் திட்டமிடப் பட்ட, சமன் செய்யப்பட்ட ஓர் உழைப்பாக இருக்கிறது. இந்தப் பண்பு மாற்றத்தின் விளைவாக, ஒரு தொழிற்சாலை அல்லது பணிமனை, ஒரு கூட்டுப் பண்ணை அல்லது அரசுப் பண்ணையில் நிலவும் உற்பத்திச் செய்முறையிலும் கூட தனிப்பட்ட உழைப்பு நேரடி சமூக உழைப்பாகவே இருக் கிறது. எனவே அங்கே, சூக்குமமான உழைப்பு, ஸ்தூல மான உழைப்பு என்கிற பகை முரண் இல்லை எனலாம்.

இன்னும் சோஷலிசக் கட்டத்தில் நேரடிச் சமூக உழைப்பு போது மான அளவு வளர்ச்சி பெறாததால், அதனை மதிப்பு, மதிப்பின் வடிவங்கள் என்ற பெயரில் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்து வருகிறது.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)

1) சோஷலிசத்தில் பண்ட உற்பத்தியின் தேவை, அதன் பண்புகள் – பி.நிக்கிடின்


சோஷலிசச் சமூகத்தில் பண்ட உற்பத்தியின் தேவை பல காரணிகளால் உருவாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சோஷலிசத்தில் பண்ட உற்பத்திக்கான பொருள் முன் நிபந் தனை, அதாவது சமூக உழைப்புப் பிரிவினை தக்க வைக்கப் படு வதுடன் விஸ்தரிக்கவும் படுகிறது. பொது சோஷலிசச் சொத்தின் இயல்பால் சோஷலிசத்தில் பண்ட உற்பத்தி உறுதி யாகிறது; சோஷலிசச் சொத்திற்கு அங்கே இரு வடிவங் கள் உண்டு. ஒன்று அரசு, அதாவது பொது மக்களின் சொத்து - இன் னொன்று கூட்டுறவுக் கூட்டுப் பண்ணைச் சொத்து.

இத்துடன், சோஷலிசத்தில், இன்னும் உழைப்பின் சமூக பொருளாதார முரண்கூறுகள் உள்ளன. மூளை உழைப்பு உடல் உழைப்பு, நுட்ப உழைப்பு -நுட்பமற்ற உழைப்பு, தொழிலாளர் உழைப்பு-கூட்டுப் பண்ணை விவசாயி உழைப்பு எனப் பல்வேறு உழைப்புப் பிரிவினைகள் அங்கே உள்ளன. அதன் விளைவாக எல்லா உழைப்புகளையும் ஒரே உழைப்பு வடிவமாகக் கொள்ள இயலவில்லை. நேர்முகமாக அல்லாமல், சுற்றி வளைத்து மதிப்பின் மூலமே இத்தகு வேறுபாடுகளைக் களைய முடிகிறது. சோஷலிசத்தில் உழைப்பு, வாழ்வின் முதல் தர அவசியமாகும் கட்டம் நிறை கூறவில்லை; இன்றும் அதற்கென்று பொருள் ஊக்குவிப்பு கள் தேவைப்படுகின்றன. இதுவும் இன்னும் வேறு சிலவும் சோஷலிசத்தின் கீழ் பண்ட-பண உறவுகளின் நிலைமைக்குக் காரண மாகின்றன
.
பண்ட-பண உறவுகளுக்கு சோஷலிசக் கட்டத்தில் இருக்கும் புதிய அர்த்தத்தை மனத்தில் வைத்து அவற்றை முழுதாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது சோஷலிச நிர்மாணத்திற்கு அவசியம். உற்பத்திச் சாதனங்களின் பொது சோஷலிசச் சொத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சோஷலிச உற்பத்தியாளர்களால் (அரசு, கூட்டுறவு நிறுவனங்கள், திட்டமிடப்பட்டு சமன் செய்த நிலை யில் சோஷலிசப் பண்ட உற்பத்தி நடைபெறுகிறது; இதன் விளைவாகவே சோஷலிசத்தில் பண்ட-பண உறவுகளுக்கு ஒரு புதிய பொருள் கிடைக்கிறது. எனவே, சோஷலிசப் பண்ட உற்பத்தி எந்நாளும் முதலாளித்துவப் பண்ட உற்பத்தியாக முடியாது.

முதலாளித்துவப் பண்ட உற்பத்தி உலகரீதியானது; சோஷலிசப் பண்ட உற்பத்தி அப்படியில்லை. சோஷலிசத்தின் கீழ் பண்ட உற்பத்தி, பண்டச் சுழற்சி ஆகிய இரண்டின் இயக்க வட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. ஆகவே, உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக முடியாது; அது வாங்கப் படுவதோ விற்கப்படுவதோ இல்லை. நிலமும் அதிலுள்ள இயற்கைச் செல்வங்களும் வர்த்தகச் சுழற்சியிலிருந்து அகற் றப்பட்டன, அதா வது இவற்றை வாங்கவோ விற்கவோ முடியாது. அவ்வாறே, சோஷலிச நிறுவனங்களும் அவற்றின் நிலைச் சொத்துகளும் (இயந்திரங்கள், கட்டடங்கள், கருவி கள் முதலியவை) வாங்கப்படுவதோ விற்கப்படுவதோ இல்லை .
பண்ட உற்பத்தி இயல்பில் அடிப்படை மாறுதல் காரண மாக, அதன் கூறுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பெரும் பாலான கூறுகள்-பண்ட உழைப்புச் சக்தி, உபரி மதிப்பு போன்றவை மட்டுமின்றி, பண்ட உற்பத்தியின் முதலாளித்துவ இயல்பை வெளிப்படுத்திய பிற கூறுகளும் கூட முற்றிலும் மறைந்து விட்டன; பண்டம், பணம், மதிப்பு, விலை, லாபம், கடன் போன்ற பொருளாதாரக் கூறுகள் தக்க வைக்கப்பட்டன, ஆனால் அவை சோஷலிசத்தின் கீழ் பெரும் மாறுதலுக்கு உள்ளாயின.

சோஷலிசச் சமூகத்தில் பண்ட-பண உறவு கள் முதலில் பொதுத் துறை, கூட்டுறவுத் துறையின் இடையே எழுகின்றன (அங்கே கூட்டுறவுத் துறை வேளாண் மை உற்பத்திக் சட்டுறவு கள், கூட்டுப் பண்ணைகள் இவற்றின் பிரதிநிதி யாக விளங்குகின்றது). கூட்டுறவுத் துறையின் உற்பத்திச் சாதனத் தேவையைப் பூர்த்தி செய்யவும் அத்துறை உறுப் பினர் தம் நுகர்வுப் பண்டத் தேவையைப் பூர்த்தி செய்ய வும் அரசுத் தொழில் துறை பண்டங்களை உற்பத்தி செய் Wன்றது. அதே போல், தொழில் துறையின் கச்சாப்பொருள் தேவையையும், பொது மக்களின் உணவுப் பொருள் மற்றும் நுகர்வுப் பொருள் தேவையையும் பூர்த்தி செய்யவே கூட் டுறவு இணை யங்கள் பண்ட உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அரசுத் தொழிற்துறைக்கும் கூட்டுறவு வேளாண்மைக்கும் இடையே நிலவும் பொருளாதாரத் தொடர் பின் ஓர் அடிப் படை உருவமே பண்டப் பரிவர்த்தனை ஆகும்.

இரண்டாவதாக, பண்ட உற்பத்தியும் பண்டச் சுழற்சி யும் அரசுத் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய இரண்டிலும் கூட்டுப் பண்ணை யாளர்கள் தமது துணை நிலங்களிலும் உற்பத்தி செய்யப்படும் நுகர்வுப் பண்டங்களைத் தழுவி யாமைகின்றன. வாங்கல்-விற்றல் அமைப்பின் மூலமாக நகர்ப் புற, கிராமப்புற மக்களின் தனிச்சொத்தாக அந்த நுகர்வுப் பண்டங்கள் மாறுகின்றன.

மூன்றாவதாக, உற்பத்திச் சாதன உற்பத்தி வட்டத்தில் அரசுத் துறைக்குள்ளேயே பண்ட உறவுகள் ஏற்படுகின்றன. வாங்கல்-விற்றல் வாயிலாக, நிறுவனங்கள் தம்முள் அரசுத் துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திச் சாதனங்கள் (இயந்திரங்கள், கருவிகள், உலோகம், நிலக் கரி, சிமெண்ட் முதலியவை) பண்டங்களாகச் சுழல்கின்றன.

நான்காவதாக, அயல் வணிகப் பரிமாற்றம் வாயிலாக, சோஷலிச அரசுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பண்ட உறவுகள் எழுகின்றன
.
சோஷலிசச் சமூகத்திற்குப் பண்ட உற்பத்தி உதவு கின்றது; அதன் உற்பத்திச் சக்திகளை வளர்க்கப் பெரிதும் துணை புரிகின்றது. சோஷலிசச் சமூகம் பொதுமக்கள் சொத்து என்கிற முழுமுதல் கம்யூனிசக் கட்டத்தையும் கம்யூனிச அமைப்பு வினியோகத்தையும் அடையும் போது, பண்ட-பண உறவுகள் பொருளாதார ரீதியில் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகப் போய் அழிந்தொழியும் எனலாம்.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)