Thursday 28 December 2017

4. பொருளாதார விதிகள்

உற்பத்தியில் சமூக உறவுகளும் அவற்றின் இயல்பான தற்செயல் தொடர்புகளும் பொருளாதார விதிகளில் வெளிப்படுகின்றன. பொருளாதார விதிகள் புறவயமானவை. அதாவது அவை மனிதர்களின் சித்தம், உணர்வு ஆகிய வற்றைச் சாராத சுதந்திரமானவை. உற்பத்திச் சக்திகளின் தரத்தால் தீர்மானிக்கப்படும் புறவயத் தன்மையுடைய உற்பத்தி உறவுகளினால் அவை சுதந்திரமானவையாக உள்ளன. இத்தகைய விதிகள் வரலாற்று பூர்வமானவை. ஏனெனில் அவை வரலாற்றுப் பூர்வமாக நிலவும் உற்பத்தி உறவுகளை வெளிப்படுத்துகின்றன.

பொருளாதார விதிகளின் செயல்பாடு உற்பத்தி உறவுகளின் தன்மையைப் பொறுத்துள்ளது. தனிச் சொத்துரிமையால் மக்கள் பிரிக்கப்படும் முதலாளித்துவ சமுதாயத்தில் பொருளாதார விதிகள் தன்னியல்பாக செயல்படுகின்றன. வர்க்கப் போராட்டம், போட்டி ஆகியவற்றால் அவை தெளிவாக்கப்படுகின்றன. சோஷலிச சமுதாயத்தில் உணர்வு பூர்வமான முறைப்படுத்தப்பட்ட மக்களின் நடவடிக்கையால் அவை நிறைவேற்றப்படுகின்றன.
.....
மக்கள் பொருளாதார விதிகளைப் பற்றிய அறிவினைப் பெற்று அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அறிவின் எல்லை, பொருளாதார விதிகளைப் பயன்படுத்தும் எல்லை, பொருளாதார விதிகளைப் பயன்படுத்தும் எல்லை, நோக்கங்கள் ஆகியவை மீண்டும் உற்பத்தி உறவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு சமூக-பொருளாதார முறைக்கும் பொருளாதார விதிகள் அமைப்பு ஒன்று உண்டு. அவற்றில் குறிப்பிட்ட சமுக முறைக்கு உரிய விதிகளும் சமுதாயம் வாழ்வதற்கான பொதுப்படையான நிபந்தனைகளே வெளிப்படுத்தும் விதிகளும் அடங்கியுள்ளன. மேலும் சில விதிகள் ஒரே ஒரு சமுக பொருளாதார அமைப்புக்கு மட்டும் அடங்கியதாக இராது. அவைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டவை. ஆனால் ஒவ்வொன்றும் உற்பத்தி உறவுகளின் குறிப்பட்ட அம்சங்களே வெளிப்படுத்தும், குறிப்பிட்ட உற்பத்தி முறையை ஆளுகின்ற அடிப்படைப் பொருளாதார விதியால் மொத்தமாக குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின் சாரம் வெளிப்படுத்தப்படுகிறது.

அரசியல் பொருளாதாரம் உற்பத்தி உறவுகளைப் பற்றியது. எனவே இயல்பாகவே அது, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் பொருளாயத நன்மைகளின் உற்பத்தி வினியோகம் ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார விதிகளைக் கவனிக்கிறது.

எதார்த்த வாழ்க்கை பொருளாதார விதிகளை அறிவதற்கான தோற்றுவாயாகவும், விஷயங்களின் பெருக்கத்தாலும் பல்வகைப்பட்ட இயல் நிகழ்சசிகளாலும் குணாம்சப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. ஆழமாக அடிபட்ட நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக விஞ்ஞானப் பூர்வமான பிரித்தெடுக்கும் முறையையே தேர்ந்து எடுக்க வேண்டும். அதன்படி நம் கவனத்திற்குட்பட்டவற்றின் உண்மைப் பொருளை ஆழமாகப் பார்த்து தேவையற்றதை விட்டுவிட வேண்டும். ஆராயப்படும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அவற்றின் பண்பு, அளவு ஆகியவற்றின் நிச்சயத் தன்மையாலும் அவற்றின் வளர்ச்சியாலும் மதிப்பிடப்படு கின்றன. அவற்றின் வளர்ச்சியானது உள் முரண்பாட்டின் அடித்தளத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு தத்துவம் மிகத் திட்டமாக ஆக்கப்படுகிறது. பிரித்து ஆய்தல், தொகுத்தாய்தலால் ஈடு செய்யப்படுகிறது. தணிவிதியிலிருந்து பொது விதிக்குச் செல்வதும், பொது விதியிலிருந்து தனிவிதிக்குச் செல்வதும் சேர்க்கப்படுகிறது. தர்க்க ரீதியான சிந்தனை ஒட்டம் உண்மையிலேயே வரலாற்றுப் பூர்வமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் பொருளாதார நடைமுறை சாரத்திற்குள் நுழைவதில்லை. அவர்கள் மேம்போக்காகத் தெரியும் விஷயங்களை மட்டும் விவரித்து வகைப்படுத்துகிறார்கள். இந்த அணுகுமுறை எதார்த்தத்தில் முதலாளித்துவம் இருப்பதைவிட, நன்றாக இருப்பதாக அவர்களை எண் ணும்படி செய்கிறது. முதலாளித்துவ சுரண்டல் மேற்போக்கில் மறு உருவத்திலுள்ளது. அநேக பூர்ஷ்வா பொருளா தாரவாதிகள் பொருளாதார விதிகள் இருப்பதையே மொத்தமாக மறுக்கின்றனர். மற்றவர்கள் ''உலகம் முழுவதும் பொருந்தக் கூடியதும் அழிவற்றதுமான விதிகளை'' முன்வைக்கின்றனர். வரலாற்று பூர்வமாக நிலையற்றதான ஒரு இயல் நிகழ்ச்சியை தத்துவ அளவில் சர்வவியாபகமானதாகவும் அழியாததாகவும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.


(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

No comments:

Post a Comment