Saturday 30 December 2017

07. ஏகாதிபத்தியம்

"19ம் நூற்றண்டின் இறுதியில் உலகம் பூராவின் கவனமும், ஸ்பெயின்- அமெரிக்க மற்றும் ஆங்கிலேய- போயர் யுத்தங்கள் வெடித்த மத்திய அமெரிக்காவிற்கும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கும் திரும்பியது. முதலாளித்துவம் தனது வளர்ச்சியில் கடைசி மற்றும் உச்சக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தில் நுழைந்ததைக் குறிக்கும் இரத்தக் கிளறியான அறிகுறிகளாக இவை அமைந்தன.

'ஏகாதிபத்தியம்' எனும் கருதுகோளைக் காலணியாதிக்கப் பேரரசுகளின் தோற்றத்தோடு மட்டும் சம்மந்தப் படுத்த பூர்ஷ்வாப் பொருளாதாரவாதிகள் அடிக்கடி முயலுகின்றனர். ஆனால் இது அதனுடைய ஒரு அம்சம் மட்டுமே முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டத்திற்குப் பல குணாம்சங்கள் உள்ளன. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்துதான் ஏகாதிபத்தியத்தின் சாரத்தை விளக்குகின்றன.
...
ஏகாதிபத்தியத்தின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்ந்து, அதன் இன்றைய நிலையைப் பார்ப்போம்.

வி. இ. லெனின் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய பன்முக சித்தரிப்பை அளித்தார். ஏகாதிபத்தியம் என்பது முதலாவதTக, ஏகபோக முதலாளித்துவம், இரண்டாவதாக, ஒட்டுண்ணி அல்லது அழுகி வரும் முதலாளித்துவம், மூன்றாவதாக, அழிந்து வரும் முதலாளித்துவம் என அவர் காட்டினர், ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிகச் சுருக்கமான வரையறையைத் தருவதெனில், இதை ஏகபோக முதலாளித்துவம் என வருணிக்கலாம் என்று வி. இ. லெனின் சுட்டிக் காட் டினர்.

ஏகபோகங்கள் என்றால் என்ன, ஏகபோக முதலாளித்து எப்படி மாறுபடுகிறது? ஏகபோகங்கள் என்பது பொருளாதாரத்தின் ஒரு துறையில் அல்லது ஒரு சில துறைகளில் ஏகபோகமாக அதாவது தனியதிகார முறையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பிரம்மாண்டமான முதலாளித்துவக் கூட்டமைப்புகள். இவை உற்பத்தி மற்றும் மூலதனம் ஒருமுனைப் படுவதன் நியதியான விளைவாகத் தோன்றின.

தொழில்துறை முதலாளித்துவச் சகாப்தத்தின் சுதந்திரமான போட்டியினல் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங் களால் வெளியே தள்ளப்படுகின்றன. உற்பத்தியின் ஒருமுனைப் படுத்தல், அதாவது மேன்மேலும் பெரிய நிறுவனங்களில் உற்பத்தி ஒன்றுதிரள்வது நடைபெறுகிறது. உபரி மதிப்பின் ஒரு பகுதி அதனோடு சேருவதால் மூலதனமும் ஒருமுனைப்படுகிறது. மூலதனம் ஒருமுனைப்படுவதோடு கூட சேர்ந்து அதன் மையப்படுத்தலும் நடைபெறுகிறது. இது தன்னிச்சையான அல்லது வலுக்கட்டாயமான முறையில் பல மூலதனங்கள் ஒன்றிணைவதாகும்; பங்கு தோழமையமைப்புகளும் ஐக்கிய மூலதன அமைப்புகளும் தோற்றுவிக்கப்படுகையில் - தன்னிச்சையாக, போட்டிப் போராட்டத்தில் சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விழுங்கும் போது- வலுக்கட்டாயமாக இது நடைபெறுகிறது.

பெரும் முதலாளிகளுக்கு இடையேயான போட்டி குறிப்பாகக் கடுமையானதாகவும் அழிவுத்தன்மையுடையதாகவும் மாறுகிறது. இவர்களில் ஒவ்வொருவரும் சந்தையைக்கைப் பற்றவும் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டவும் முயலுகிறார். இது சாத்தியமில்லையெனில், பொருள் உற்பத்தியின் அளவு, விலைகள் முதலியவற்றைப் பற்றி தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொள்ள அவர்கள் முயலுகின்றனர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சிறிய நிறுவனங்களைவிட ஒரு சில பத்து பிரம்மாண்டமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்வது எளிது. இவ்வாறாக மூலதனம் மற்றும் உற்பத்தியின் ஒருமுனைப்படுத்தலும் மையப்படுத்தலும் ஏக போகங்களின் தோற்றத்திற்கு இட்டுச் செல்கின்றன.
....
ஏகாதிபத்தியத்தில் சுதந்திரமான போட்டி ஏகபோகத்தால் மாற்றப்படுகிறது என்பதற்கு எல்லாவித போட்டியும் அகற்றப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. முதலாளித்துவ நாடுகளில் ஏராளமான நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களும் விவசாயிகள், கைவினைஞர்கள் போன்ற பல சிறிய பண்ட உற்பத்தியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். நிச்சயமாய் இவர்களால் ஏகபோகக் கூட்டமைப்புகளை எதிர்த்துப் போரிட இயலாது, இவர்கள் ஏகபோகங்களுக்கு ஒருவித கட்டணத்தைச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படு கின்றனர். இவ்வாறு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான பண்ணைச் சொந்தக்காரர்கள் தமது விளை பொருட்களை மொத்தமாக பெரிய வர்த்தகக் கம்பெனிகளுக்கு விற்கின்றனர், பின் இவை அவற்றை சில்லறை விலைக்கு விற்கின்றன. பண்ணைச் சொந்தக்காரன் ஏகபோகங்களின் முன் சக்தியற்றவனுயுள்ளான், இவற்றால் நிர்ணயிக்கப்பட்ட விலையை இவன் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. இதைப் பயன்படுத்தி ஏகபோகத்தினர் மொத்த விலைகளைக் குறைத்து சில்லறை விலைகளை அதிகப்படுத்துகின்றனர். விலைகளின் வித்தியாசம் நம்ப இயலாத லாபத்தைக் கொணருகிறது. அதே நேரத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பண்ணைகள் திவாலாகின்றன.
...
வி. இ. லெனினுல் கண்டுபிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் சமமின்மையைப் பற்றிய விதி முதலாளித்துவச் சமுதாயத்தின் கடைசிக் கட்டத்தின் சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் திட்டமின்மையும் அராஜகத் தன்மையும் முதலாளித்துவத்தின் ஆரம்பக் கட்டங்களிலும் அதன் வளர்ச்சியின் சமமின்மையை முன்நிர்ணயித்தன. ஆனால் இது பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வரம்புகளுக்குள் தென்பட்டது, உலக அரங்கில் சக்திகளின் சமன்நிலையில் அதிகம் தென்படவில்லை. உதாரணமாக, முதல் ஒரு சில நாடுகளில் ஒன்றாகத் தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் நுழைந்து காலனியாதிக்கக் கைப்பற்றலில் தனது போட்டியாளர்களே வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிய இங்கிலாந்து பல பத்தாண்டுகளுக்குத் தொழில்துறை உற்பத்தியில் முதலிடத்தை வகித்தது, உலக அரசியலின் மீது தீர்மானகரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தது.
...
ஏகாதிபத்தியக் கட்டத்தில் முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் இயற்கையாகவே நெருக்கமான பரஸ்பரத் தொடர்பில் நடைபெற்றன. நவீன முதலாளித்துவத்தை அரசு-ஏகபோக முதலாளித்துவமாகச் சித்தரித்து மார்க்சியம்-லெனினியம் தந்துள்ள வரையறுப்பில் இந்தப் பரஸ்பரத் தொடர்பு வெளிப்படையாகப் பிரதி பலிக்கிறது."


(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

No comments:

Post a Comment