Friday 29 December 2017

01. முதலாளித்துவம்

(“சமூக விஞ்ஞானம்” என்ற மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1985ல் வெளியிட்ட நூலில் இருந்து முதலாளித்துவம் பற்றிய சில பகுதிகளை தொடர்ந்து பார்க்கலாம். இந்நூலை கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.சிராஸின், வி.சுகதேயெவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.)

"முதலாளித்துவம் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப் படையாகக் கொண்ட கடைசி சமூக-பொருளாதார அமைப்பாகும்

17-19ம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவப் புரட்சிகளின் விளைவாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் நிலைபெற்ற போது, நிலப்பிரபுத்துவத்துடன் ஒப்பிடுகையில் புதிய சமுதாய அமைப்பு முற்போக்கானதாக இருந்தாலும் உழைப்புச் சுரண்டலை அது ஒழிக்கவில்லை, இதன் வடிவத்தை மட்டுமே மாற்றுகிறது என்பதை பல சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டினர். ஷார்ல் ஃபூரியே, ராபர்ட் ஒவன், மற்ற கற்பனவாத சோஷலிஸ்டுகள் முதலாளித்துவ முறைகளைக் கூர்மையாக விமரிசித்தனர். ஆனால் அவர்களாலோ, பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளாலோ உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் முறையைக் கண்டுபிடிக்கும் முக்கியக் கடமையைத் தீர்க்க இயலவில்லை. விஞ்ஞான கம்யூனிசத்தின் ஆசான்கள்தான் இக்கடமையை நிறைவேற்றினார்கள்.


தனது மேதாவிலாசம் மிக்க நூலாகிய மூலதனத்தில் கா. மார்க்ஸ் பின்வருமாறு எழுதினர்: "முதலாளித்துவ உற்பத்தி முறையும் இதற்கேற்ற உற்பத்தி மற்றும் பரிவர்த் தனை உறவுகளும் இந்நூலில் எனது ஆராய்ச்சிப் பொருளாக உள்ளன". பொருளாயத நலன்களின் உற்பத்தியையும் வினியோகத்தையும் நிர்ணயிக்கக் கூடிய விதிகளைக் கண்டுபிடித்த கா. மார்க்ஸ், முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவு மற்றும் சோஷலிசத்தின் வெற்றியின் காரணங்கள் சமுதாய வாழ்வின் பொருளாதார நிலைமைகளில் வேரூன்றியுள்ளன என்று காட்டினார்."

02. பண்டமும் பண்ட உற்பத்தியும்
03. பண்டத்தின் பண்புகள்
04. பணம்
05. மதிப்பு விதி
06. உபரி மதிப்பு – மூலதனம் உழைப்பைச் சுரண்டும் விதம்
07. ஏகாதிபத்தியம்
08. முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி
09. முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

No comments:

Post a Comment