வேலை நாளை நீட்டுவதன் மூலம், உபரி மதிப்பை அதிகரித்ததானது, தொழிலாளிகளின் எதிர்ப்பை வளர்த்தது. இது, சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கு மற்றொரு முறையை மேற்கொள்ளும்படி முதலாளிகளைத் தூண்டியது. இந்த வழிமுறை வேலை நாளின் மொத்த நேரத்தை அதிகப் படுத்துவதில்லை. ஆனால் அவசிய உழைப்பு நேரத்தைக் குறைக்கிறது. அதேசமயத்தில் இது உபரி உழைப்பு நேரத்தையும் அதன் காரணமாக உபரி மதிப்பையும் அதிகப்படுத்துகிறது. தொழிலாளிகளுக்கான உபயோகப் பொருள் உற்பத்தி செய்யும் பிரிவுகளில் உற்பத்தித் திறன் உயர்த்தப்படுவது, அவசிய உழைப்பு நேரத்தைக் குறைப்பதை சாத்தியமாக்குகிறது. அதே சமயத்தில் தொழிலாளிகளுடைய வாழ்க்கைச் சாதனங்களின் செலவையும் அதற்கேற்றாற் போல் உழைப்புச் சக்தியின் மதிப்பையும் குறைக்கிறது. முன்பு தொழிலாளியின் வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்ய 5 மணி நேரம் செலவு செய்யப்பட்டதென்றால் இப்போது, உதாரணமாக அந்த நோக்கத்திற்காக மூன்று மணி நேரந்தான் செலவிடப்படுகிறது. இதில் வேலை நாள் பின்வருமாறு இருக்கிறது:
3
மணி 7 மணி
அவசிய
நேரம் உபரி நேரம்
வேலை
நாளின் கால அளவு மாறாவிட்டாலும் சுரண்டலின் அளவு அதிகரித்து விட்டது.
அவசிய
உழைப்பு நேரத்தைக் குறைப்பது, அதற்கேற்றாற் போல், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பால்
உபரி உழைப்பு நேரம் உயர்வதன் விளைவாக ஏற்படுகிற உபரி மதிப்பு ஒப்பு நோக்கு உபரி மதிப்பு எனப்படுகிறது.
இவ்வாறு முதலாளிகள், சாத்தியமான அளவு அதிக உபரி மதிப்பைப் பெறுவதற்காக உற்பத்தி விஸ்தரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளிகளைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவது முதலிய ஒவ்வொரு சாத்தியமான வழியையும் முதலாளிகள் உபயோகிக்கிறார்கள். உபரிமதிப்பு உற்பத்திதான் முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான பொருளாதார விதியாகும்.
No comments:
Post a Comment