Sunday 6 October 2019

இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் ஆய்வு செய்த “ஆய்வு முறையே” மார்க்சியர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகும். மார்க்ஸ் காட்டியபடியே இன்றைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு உள்ளாகிறது, இதற்கு தீர்வு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் கூறியதேயாகும்.:-


மார்க்ஸ் ஆய்வு செய்த முதலாளித்துவம் அன்றைக்கு உள்ள முதலாளித்துவம் தான். “மூலதனம்” நூல் மூன்றாம் தொகுதியை, எங்கெல்ஸ் வெளியிடும் போது மூலதனம் நூலில் சொல்லப்பட்ட முதலாளித்துவத்தைவிட அன்றைய முதலாளித்துவம் வளர்ந்து காணப்பட்டது. அந்நூலின்  பின்னுரையில் பங்கு சந்தையைப் பற்றி எங்கெல்ஸ் மூலதனம் நூலில் குறிப்பிட்டதற்கு மேலாக அன்றைய பங்கு சந்தையின் நிலைமை வளர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் உள்முரண்பாடும், மறுவுற்பத்தியின் மூலம் அந்த முரண்பாடுகளும் வளர்ச்சி அடைவதைப் பற்றி மார்க்ஸ் கூறியுள்ளது  தனிவுடைமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். இந்த அடிப்படையின் மூலம் வளர்ச்சி அடைந்து கொண்ட செல்லும் முதலாளித்துத்தின் அழிவையும் அந்த அழிவில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சோஷலிச உற்பத்தி முறைக்கான சமூக மாற்றமே தீர்வு என்றும் மார்க்ஸ் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார். இன்றைய பொருளாதார வளர்ச்சியும் அதன் நெருக்கடிகளும் மார்க்சின் ஆய்வு சரி என்பதையே தொடர்ந்து நிறுபித்துவருகிறது.

ஏகாதிபத்திய கட்டத்தினை ஆய்வு செய்ய லெனினுக்கு மார்க்சின் “மூலதனம்” நூலே வழிகாட்டியாக இருந்தது, இன்றைய உலகமயமாதல் கட்டத்திலும் அதுவே வழிகாட்டியாகும்.

மார்க்ஸ் வைத்த அவ்வப் போதைய “முழங்களை” மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு அது தான் மார்க்சியம் என்று கருதுபவர்கள், இன்றைய வளர்ச்சிக் கட்டத்திற்கு மார்க்சியம் பொருந்தவில்லை என்று ஊளையிடுகின்றனர். மார்க்சியம் வறட்டுச் சூத்திரவாதமல்ல, ஏகாதிபத்திய கட்டத்தில் லெனினியமாக வளர்ந்தது போல் அது வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும்வரை வளரும்.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை மூலதனம் நூலில் படித்து அறிவதற்கு சிரமப்படுபவர்கள் “டூரிங்குக்கு மறுப்பு” என்று எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்க்சின் கருத்து தொகுக்கப்பட்டதைப் படித்தறியலாம். “டூரிங்குக்கு மறுப்பு” நூலில் “மூலதனம்” முதல் தொகுதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகளைப் பற்றி குறிப்புகள் மட்டுமே காணப்படும். இருந்தாலும் முதலாளித்துவ உள்முரண்பாட்டையும் அதன் அழிவையும் மார்க்சிய வழியில் எங்கெல்ஸ் அருமையாக தொகுத்தளித்துள்ளார்.
************************************************************************************************************

1) முதலாளித்துவத்தின் மேலோடு அதாவது பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்- உடைத்தெளியப்பட்டு முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கப்படுவதைப் பற்றி மார்க்ஸ்:-
https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_85.html

3) முதலாளித்துவஉற்பத்தி முறையினுடைய உள்முரண்பாட்டு பற்றியும் அதை நவீனப் பாட்டாளி வர்க்கம் அதனைவீழ்த்துவதின் வரலாற்றுக் பணியை வெளிப்படுத்துவதே விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை என்பதுபற்றியும் எங்கெல்ஸ்:-https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_45.html

No comments:

Post a Comment